shivayam siva

Friday 25 January 2013

சிதம்பரசாமி மடம் திருப்போரூர்,pic 1--10










செங்கல்பட்டு மாவட்டம் சென்னை மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ளது திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில். விருத்தாசலத்தில் சிதம்பர சுவாமிகள் என்பவர் சமாதி நிலையில் தியானம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவரின் தவத்தில் முருகபெருமான் காட்சி தந்தார் இதனால் மதுரைக்கு சென்று மீனாட்சியம்மனை வேண்டி 45 நாள் கடும் தவம் இருந்தார் சிதம்பர சுவாமிகள். அத்துடன் கலிவெண்பா பாடினார். இதை கேட்டு மகிழ்ந்து அவர் தவத்தை ஏற்று அன்னை மீனாட்சி காட்சி தந்தார்.
திருப்போரூரில் முருகனும் அவருடைய தேவிகளும் மண்ணுக்குள் மறைந்திருக்கிறார்கள். அவர்களை பூமியில் இருந்து எடுத்து அந்த இடத்தில் கோயில் கட்டுஎன்றாள் அன்னை மீனாட்சி.
அன்னை அருளியதை போன்று உடனே திருப்போரூருக்கு சென்று பல இடங்களில் சிலையை தேடினார். அன்னை கூறியது போல் ஒரு இடத்தில் முருகபெருமானும் அவருடன் வள்ளி தேவானை  சிலையாக தோன்றினார்கள். அந்த இடத்திலேயே ஆலயத்தை கட்டும் பணியை துவக்கினார்.பலரும் அவருக்கு பொருள் உதவி செய்தனர்.
இந்த ஸ்தலத்தில் இரண்டு சக்தி வாய்ந்த இரு சக்கரங்களையும் பிரதிஷ்டை செய்தார் சிதம்பர சுவாமிகள். இந்த இரு சக்கரங்களுக்கு சக்தி அதிகம்.கோவிலுக்கு கந்தசாமி கோவில் என்று பெயரிட்டார்.. இறுதியில் கந்தசாமி கோவில் கர்ப்பக் கிரகத்தில் ஜோதிமயமாக மறைத்துவிட்டார் என்று சொல்லப் படுகிறது.இவர் தங்கி இருந்த இடம் திருப்போரூரில் சிதம்பரசாமி மடம் என்ற பெயரில் பராமரிக்கப் படுகிறது

No comments:

Post a Comment